உள்ளூர் செய்திகள்
தொழிலாளி பலி

கோயம்பேடு அருகே கட்டிடபணி முதல்மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2021-12-03 09:39 GMT   |   Update On 2021-12-03 09:39 GMT
கோயம்பேடு அருகே கட்டிடபணி முதல்மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வந்தவாசி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (42) கட்டிட தொழிலாளி.

இவர் சென்னை மேட்டுக்குப்பம் புவனேஸ்வரி நகரில் உள்ள கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வெங்கடேசன் முதல் தளத்தில் நின்று கொண்டு வேலை பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர். மீட்டு ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News