செய்திகள்
விபத்து

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலி

Published On 2021-10-21 10:12 GMT   |   Update On 2021-10-21 10:12 GMT
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:

திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). சம்பவத்தன்று இளையராஜா மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் மாமியார் ஆரோக்கியமேரி ஆகியோருடன் தஞ்சையிலிருந்து ஆலக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது வண்ணாரப்பேட்டை சிவகாமிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது திடீரென நாய் குறுக்கே ஓடியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர்.

இதில் பலத்த ஆரோக்கியமேரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து ஆரோக்கியமேரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோக்கியமேரி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News