செய்திகள்
ஆம்பூர் அருகே கார் மோதி டிராக்டர் டிரைவர் பலி
ஆம்பூர் அருகே கார் மோதி டிராக்டர் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42), டிராக்டர் டிரைவர். இவர் நேற்று ஆலங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பின்னால் வந்த கார் மோதியதில் அவர் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்தார். இதில் மற்றொரு கார் அவர் மீது மோதியதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.