செய்திகள்
கைது

பாளை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

Published On 2021-09-21 14:28 GMT   |   Update On 2021-09-21 14:28 GMT
பாளை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாளை அருகே உள்ள மணப்படை வீட்டை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது53), தொழிலாளி. இவரது மகன் பாலு. இவருக்கும் கீழநத்தம் மேலூரை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் மூர்த்தி நேற்று தனது நண்பர்களுடன் இருதயராஜ் வீட்டுக்கு சென்று முன்விரோதம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி அங்கிருந்த வேனின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதை தட்டிக் கேட்ட இருதயராஜை அவதூறாக பேசி அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனால் அவர் சுதாகரித்து தப்பி சென்றார். தொடர்ந்து அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி மற்றும் நாராயணனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News