செய்திகள்
கொரோனா தடுப்பூசி

குடவாசல் அருகே 52 புதுகுடியில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-03 12:05 GMT   |   Update On 2021-09-03 12:11 GMT
குடவாசல் அருகே உள்ள 52 புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள 52 புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது முகாமில் திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கலைவாணி முன்னிலையில், திருவிடச்சேரி, வடவேர், சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், மூலங்குடி மஞ்சக்குடி ஆகிய ஊர்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் திருவிடச்சேரி சுகாதார ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பணியாற்றினர்.
Tags:    

Similar News