செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-08-21 09:52 GMT   |   Update On 2021-08-21 09:52 GMT
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் சுசித்ரா (வயது 14). இவர் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சுசித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News