செய்திகள்
நகை பறிப்பு

திருவோணம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-07-10 11:49 GMT   |   Update On 2021-07-10 11:49 GMT
திருவோணம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

திருவோணத்தை அடுத்துள்ள வெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது36). நேற்றுமுன்தினம் இரவு இவர் தனது கணவர், குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News