செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஐ.டி. பிரிவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசு -எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2021-07-04 11:22 GMT   |   Update On 2021-07-04 11:22 GMT
அதிமுகவுக்கு எதிராக மேற்கொள்ளும் அடக்குமுறையை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்து சுதந்திரத்தின்படி நியாயமான முறையில் பதிவிட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது, அரசை தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர். 

2, 3 ஆண்டுகளக்கு முன்பு திமுகவை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதியப்பட்ட கருத்துக்களுக்காகவும் இப்போது வழக்கு போடப்படுகிறது. நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் 
திமுக
 நாட்டம் செலுத்துகிறது.



திமுகவினர் தங்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் மற்றவர்களுக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டு, தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று, காவல்துறை மூலம் அதிமுகவுக்கு எதிராக மேற்கொள்ளும் அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். திமுக அரசின் இந்த அடக்குமுறையையும், பொய் வழக்குகளையும் சட்டரீதியாக சந்திக்கும் வல்லமை அதிமுகவுக்கு உண்டு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News