செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
தமிழரசன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது28). ஆட்டோ டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் தமிழரசன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தமிழரசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது28). ஆட்டோ டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் தமிழரசன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தமிழரசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.