செய்திகள்
மரணம்

கோவை அருகே விபத்தில் மூதாட்டி பலி

Published On 2021-06-22 11:16 GMT   |   Update On 2021-06-22 11:16 GMT
கோவை அருகே விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனூர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி முத்தம்மாள் (வயது 85). சம்பவத்தன்று இவர் கெம்பனூரில் இருந்து துர்கா நகர் பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து முத்தம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News