செய்திகள்
கணபதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி
பொதுமக்கள் அனைவரையும் காக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என அறிவித்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
கணபதி:
தமிழகத்தில் கொரோனா பரவலைகட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரையும் காக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என அறிவித்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை கணபதி நகர நல மையத்தில் டாக்டர் நேத்ரா தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்த வந்திருந்த 20 மாற்றுத்திறனாளிகள், அவர்களை அழைத்து வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் 40 பேர் என 60 நபர்களுக்கு தடுப்பூசியினை செலுத்தினர்.