செய்திகள்
ஆம்பூர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
ஆம்பூர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற ஏதோ ஒரு ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 50 வயதுடைய ஆண் ஆம்பூர் -விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையேதவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.