செய்திகள்
கொரோனா விதிகளை மீறிய 354 பேர் மீது வழக்கு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசங்கள் அணியாமல் பொதுஇடங்களில் சென்ற 266 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களுக்கு ரூ.53,200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாகன விதிமீறல் தொடர்பாக 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.94,200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 430 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.