செய்திகள்
முக ஸ்டாலின்

புத்தகம் போதும்... பூங்கொத்து வேண்டாம்- முதலமைச்சர் அறிவுறுத்தல்

Published On 2021-05-14 08:12 GMT   |   Update On 2021-05-14 09:28 GMT
நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்.
சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கருணை உள்ளத்துடன் பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.



* என்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும். புத்தகம் கொடுத்தால் போதும்.

* அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும்.

* நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக  மக்களின் அன்பைப் பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News