செய்திகள்
தற்கொலை

மதுக்கூர் அருகே வி‌ஷம் குடித்து சிறுமி தற்கொலை- தாய், சகோதரருக்கு தீவிர சிகிச்சை

Published On 2021-04-21 10:13 GMT   |   Update On 2021-04-21 10:13 GMT
மதுக்கூர் அருகே தாய், பிள்ளைகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுக்கூர்:

மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 32). இவர்களுக்கு ஜீவபிரணிதா (8), பிரகதீஸ்வரன் (4) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தமிழரசி மற்றும் அவரது 2 பிள்ளைகளும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவபிரணிதா இறந்தார். தமிழரசி, பிரகதீஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News