செய்திகள்
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

கொரோனா பாதிப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி

Published On 2021-04-06 18:35 GMT   |   Update On 2021-04-06 18:35 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பு 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
சென்னை:

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கி, வாக்குப்பதிவு நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். சகாயம் அரசியல் பேரவையின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். 



இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News