செய்திகள்
திருச்செங்கோடு அருகே தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி- போலீசார் விசாரணை
திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் மோதிய விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு சட்டையம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாச்சியம்மாள் (வயது 66). இவர் நேற்று மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக திருச்செங்கோடு- ஈரோடு ரோடு சந்தைப்பேட்டை மேடு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் மூதாட்டி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார்தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் யுவராஜ் (35) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு சட்டையம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாச்சியம்மாள் (வயது 66). இவர் நேற்று மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக திருச்செங்கோடு- ஈரோடு ரோடு சந்தைப்பேட்டை மேடு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் மூதாட்டி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார்தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் யுவராஜ் (35) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.