செய்திகள்
விபத்து பலி

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Published On 2021-03-31 15:54 GMT   |   Update On 2021-03-31 15:54 GMT
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காட்டை அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது 45). இவரது நண்பர் ரகுபதி. நேற்று முன்தினம் இருவரும் மேல்விஷாரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இருவரும் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கமல்ராஜ், ரகுபதி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்த ஆரிப் (23) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கமல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரகுபதி மட்டும் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News