செய்திகள்
மரணம்

பணகுடியில் வாலிபர் மயங்கி விழுந்து பலி

Published On 2021-03-14 10:35 GMT   |   Update On 2021-03-14 10:35 GMT
பணகுடியில் வாலிபர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பணகுடி அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் இசக்கிராஜா(வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு பணகுடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News