செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே கொரோனா தொற்றால் வேலை இழப்பு- டிரைவர் தற்கொலை

Published On 2021-03-06 13:01 GMT   |   Update On 2021-03-06 13:01 GMT
திருவள்ளூர் அருகே கொரோனா தொற்றால் வேலை இழந்த டிரைவர் ரெயில்வே மேம்பால மின் விளக்கு கம்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேக்கப் ஜெயசீலன் (வயது 36). இவருக்கு செல்வி (வயது 36) என்ற மனைவியும், யுவராஜ் (14) என்ற மகனும், கீர்த்தனா (12) என்ற மகளும் உள்ளனர். ஜேக்கப் ஜெயசீலன் தனியார் டிராவல்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கொரோனா தொற்றால் வேலை இழந்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து அங்கு கூலி வேலை செய்து வந்தார். அவர் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மனவேதனையில் இருந்த ஜேக்கப் ஜெயசீலன் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள மின் விளக்கு கம்பத்தில் தனது சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செல்வி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News