செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

முதலமைச்சர் ஆகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-03-02 02:45 GMT   |   Update On 2021-03-02 02:45 GMT
முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை:

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். கூட்டணி நிலைப்பாடு குறித்து பிறகு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம் தேனி புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News