செய்திகள்
தற்கொலை

பூதலூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2021-02-28 15:18 GMT   |   Update On 2021-02-28 15:18 GMT
பூதலூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த்(வயது28). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் இறந்தார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News