செய்திகள்
பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமி நினைவு பரிசு வழங்கிய காட்சி.

பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கிய ஓபிஎஸ் – இபிஎஸ்

Published On 2021-02-25 11:13 GMT   |   Update On 2021-02-25 11:13 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நினைவு பரிசு வழங்கினர்.
கோவை:

புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, அங்கு பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி, சில திட்டங்களி தொடங்கி வைத்தார். இதன்பின் பாஜக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார். இந்நிலையில், புதுச்சேரி வந்த பிரதமர் தனது பயணத்தை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நினைவு பரிசு வழங்கினர்.

இவ்விழாவில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
Tags:    

Similar News