செய்திகள்
கோப்பு படம்.

காரைக்குடியில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு

Published On 2021-02-15 11:32 GMT   |   Update On 2021-02-15 11:32 GMT
காரைக்குடியில் நடைபயிற்சி சென்ற பெண் முகத்தில் ஸ்பிரே அடித்து 4½ பவுன் நகையை பறித்து சென்ற 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரைக்குடி:

காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 49). இவர் சம்பவத்தன்று காலை 6.15 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அரியக்குடி செல்லும் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் குழந்தையம்மாள் முகத்தில் கண் எரிச்சலை தரும் ஸ்பிரேயை அடித்தனர். இதனால் அவர் கண் எரிச்சலுடன் அவதிப்பட்டார்.

உடனே அந்த ஆசாமிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்து நகையை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News