செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்,

பிரதமர் நரேந்திர மோடி பாமரர்களின் சேவகர் - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

Published On 2021-02-14 08:58 GMT   |   Update On 2021-02-14 09:16 GMT
பல தலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர் என்றும் தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றி வருகிறார் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை:

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். அவர் பல தலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர். தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றி வருகிறார்.

மத்திய அரசுடனான இணக்கம் தமிழ்நாட்டை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறது.

2-வது மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்க பணிக்காக நிதி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரெயில் வழித்தடம் உள்பட 2 முக்கிய ரெயில்வே திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக பிரதமருக்கும், ரெயில்வே துறைக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News