செய்திகள்
கொள்ளை

நெல்லை அருகே வீடு புகுந்து பணம் திருட்டு

Published On 2021-02-10 13:26 GMT   |   Update On 2021-02-10 13:26 GMT
நெல்லை அருகே வீடு புகுந்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் வளவி (வயது 35). இவர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்ற ரூ.12 ஆயிரத்தை வீட்டு பீரோவில் வைத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வளவி வேலைக்கு சென்றிருந்த போது, மர்ம நபர் அவரது வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்று விட்டார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News