செய்திகள்
சிவலிங்கம், வெங்கடேசன், மோகன்

வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 3 பேர் பலி

Published On 2021-01-27 11:04 GMT   |   Update On 2021-01-27 11:04 GMT
வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி நேதாஜிநகரை அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 20). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்களில் வந்து கொண்டிருந்தார். அதேபோல் கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (19) மற்றும் அவரது நண்பர் மோகன் (26) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வெள்ளக்குட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். வாணியம்பாடி-ஆலங்காயம் ரோட்டில் நேதாஜிநகர் என்ற இடத்தில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்து துடிதுடித்தனர்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் வெங்கடேசன் வழியிலேயே இறந்து விட்டார்.

சிவலிங்கம் மற்றும் மோகன் ஆகியோர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.

இது தொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News