செய்திகள்
கைது

மதுரை அருகே ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய 3 பேர் கைது

Published On 2021-01-25 05:59 GMT   |   Update On 2021-01-25 05:59 GMT
மதுரை அருகே ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை பெருங்குடி அருகே உள்ள வலையப்பட்டி பகுதியில் ஆடை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த செல்வம், முத்துராமு, விஜய் ஆகியோர் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஜவுளி மூலப்பொருட்களை திருடி உள்ளனர். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் ராகவன் பெருங்குடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News