செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்?- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2021-01-22 04:45 GMT   |   Update On 2021-01-22 04:45 GMT
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

* மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன்.

* தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908வது நபராக நான் போட்டுக்கொண்டேன்.

* கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்; வதந்திகளையும் பரப்பாதீர்.

* மாணவர்கள், குழந்தைகளை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கவில்லை. பெண்களை குறைவாக பாதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News