செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

நானும் தடுப்பூசிப் போட்டுக்கொள்கிறேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2021-01-20 11:17 GMT   |   Update On 2021-01-20 11:17 GMT
மருத்துவ துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “  நாளை மறுநாள் ( வெள்ளிக்கிழமை) நான் கொரோனே தடுப்பூசி செலுத்திக்கொள்கிறேன்.

ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக ஐஎம்ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News