செய்திகள்
கோப்புபடம்

முசிறி அருகே குடும்பத்தகராறில் 2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-18 14:48 GMT   |   Update On 2021-01-18 14:48 GMT
முசிறி அருகே குடும்பத்தகராறில் 2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:

முசிறி அருகே அந்தரபட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 37) . கூலித்தொழிலாளி. இவரது 2-வது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் ஆனந்தி தற்போது கர்ப்பமாக உள்ளார். முதல் மனைவி ஹேமலதாவிற்கு 4 மகள்கள் உள்ளனர். குடும்பதகராறு காரணமாக பிரபு தற்போது 2-வது மனைவியுடன் வசித்துவருகிறார். இந்த நிலையில் ஆனந்திக்கும், பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபு நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
Tags:    

Similar News