search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி தற்கொலை"

    • டந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

    பெரியகுளம்:

    ெபரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). இவர் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியிடம் தனக்கு வாழ பிடிக்க வில்லை என புலம்பியுள்ளார்.

    அவர் பாண்டியனுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாண்டியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோம்பையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி சபீர் ராஜா உயிரிழந்தார்.
    • கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பயாஸ் ராஜா (வயது 60). இவரது தம்பி சபீர்ராஜா (58). இவர்கள் 2 பேரும் கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

    கட்டிடத்தின் மேல் தளத்தில் பயாஸ் ராஜாவும், கீழ் தளத்தில் சபீர் ராஜாவும் வியாபாரம் செய்து வந்தனர். இருவருக்கும் இடையே கடைக்கு செல்லும் பொது நடைபாதை யாருக்கு சொந்தம் என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் பயாஸ் ராஜா தனக்கு சொந்தமான ஒரு பகுதியை இரும்பு வேலியால் அடைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தம்பி சபீர் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது கடை முன்பு நின்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சபீர் ராஜா உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலை குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    சித்தாமூரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது49). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை வீட்டில் இருந்து சென்ற அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆண்டிபட்டி அருகே வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
    • இவர் வைகை அணை சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள் புரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது49). இவர் வைகை அணை சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.

    உடல்நிலை பாதிக்க ப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார்.
    • ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). பானி பூரி வியாபாரியான இவர் திருவிழா காலங்களில் தனது உறவினர்களுடன் சேர்ந்து கூடுதல் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் ஆசைக்கு ஒன்று, அழகுக்கு ஒன்று, அந்தஸ்துக்கு ஒன்று என அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா, செல்வி, சித்ரா ஆகிய 3 பேரை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் செல்விக்கு ஒரு மகன், ஒரு மகளும், சித்ராவுக்கு ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் வளர்ந்து ஆளாகி திருமணத்திற்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே மதுவுக்கு அடிமையான ராஜேந்திரன் பானி பூரி வியாபாரம் செய்து கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை குடித்தே அழித்து வந்தார். இதனால் 3 மனைவிகளுக்கும் குடும்பம் நடத்த சரியாக பணம் கொடுப்பதில்லை. இதனால் ராஜேந்திரனை முதலில் திருமணம் செய்து கொண்ட சகுந்தலா கணவரை பிரிந்து, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

    அப்போது முதலே மற்ற இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகள் ராஜேந்திரனை வெறுக்க தொடங்கினர். நாளுக்கு நாள் முழு நேரமும் மது போதையில் திளைத்த ராஜேந்திரனை அவரது 2 மனைவிகள் மற்றும் உறவினர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை.

    மேலும் சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார். ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

    ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி, அனைவரும் வெறுத்து ஒதுக்கியதால் மனம் உடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி குன்னத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து, அதனுடன் விஷம் கலந்து குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    3 மனைவிகள், பிள்ளைகள் இருந்தும் ஒருவேளை உணவு கூட தராமல் குடும்பத்தினர் ஒதுக்கியதால் மனமுடைந்த பானி பூரி வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பைனான்சியர் மேலும் பணத்தைக் கேட்டு வர்மாவுக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • பைனான்சியர் வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மிரட்டி விட்டு சென்றார். இதனால் வர்மா மனமுடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் வர்மா (வயது 40) வியாபாரி. இவர் குண்டூரை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் பைனான்சியர் மேலும் பணத்தைக் கேட்டு வர்மாவுக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வர்மா அவரது போனை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் பைனான்சியர் வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மிரட்டி விட்டு சென்றார். இதனால் வர்மா மனமுடைந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்ற வர்மா அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜன்னலை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் வர்மா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து வர்மாவின் பிணத்தை மீட்டனர்.

    இது குறித்து குண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அறையை போலீசார் சோதனை செய்தபோது ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வர்மா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் தான் வியாபாரத்திற்கு வாங்கிய கடனை முழுவதுமாக செலுத்தி விட்டேன்.

    இருப்பினும் பைனான்சியர் மேலும் பணத்தை கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி இருந்தார்.

    இதுகுறித்து குண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே பால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.


    தேனி:

    தேனி அருகே பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன்(52). பால் வியாபாரி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×