search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை
    X

    கோப்பு படம்.

    பெரியகுளம் அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை

    • டந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

    பெரியகுளம்:

    ெபரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). இவர் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியிடம் தனக்கு வாழ பிடிக்க வில்லை என புலம்பியுள்ளார்.

    அவர் பாண்டியனுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாண்டியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோம்பையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×