

ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள் புரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது49). இவர் வைகை அணை சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.
உடல்நிலை பாதிக்க ப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.