செய்திகள்
தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-16 09:47 GMT   |   Update On 2021-01-16 09:47 GMT
கும்மிடிப்பூண்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பரணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 39). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி வசந்தி (32) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் தனி அறையில் இருந்த போது, மின்விசிறியில் சங்கர் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News