search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி தற்கொலை"

    பொள்ளாச்சி அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி கன்னிமார்கோவில் வீதியை சேர்ந்தவர் அய்யப்பன். இரவது மகன் பிரகாஷ் ( வயது 28). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று பிரகாஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரகாஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை கே.ஜி.சாடி அருகே உள்ள நவக்கரையை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 30). திருமணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×