செய்திகள்
கைது

முள்ளக்காடு அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது

Published On 2021-01-11 14:46 GMT   |   Update On 2021-01-11 14:46 GMT
முள்ளக்காடு அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு தேவி நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் ரமேஷ் (வயது 25). தொழிலாளியான இவருக்கும் முள்ளக்காடு கக்கன்ஜி நகரைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற சில்லி (27), சாமி நகரைச் சேர்ந்த பேச்சிக்கனி (29), பொன்மாடசாமி (26) ஆகியோருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் அவரது பெரியம்மா சகுந்தலா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அலெக்ஸ், பேச்சிக்கனி, பொன் மாடசாமி ஆகிய 3 பேரும் ரமேசிடம் மீண்டும் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ரமேஷை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரமேஷின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிச்சை பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக அலெக்ஸ், பேச்சிக்கனி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பொன் மாடசாமியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News