செய்திகள்
நகை பறிப்பு

மதுரை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-01-08 09:47 GMT   |   Update On 2021-01-08 11:08 GMT
மதுரை அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் சக்திபிரியா(வயது 35). சம்பவத்தன்று மேலஅனுப்பானடி பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அப்போது அவர்கள் சக்திபிரியா கழுத்தில் அணிந்திருந்த  நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News