செய்திகள்
கோப்புபடம்

காரிமங்கலத்தில் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-01-04 08:33 GMT   |   Update On 2021-01-04 08:33 GMT
காரிமங்கலத்தில் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டியை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 30). 108 ஆம்புலன்ஸ் ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை காரிமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு ஆம்புலன்சில் பணிக்காக வெளியே சென்றார். 

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News