செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களான கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல சரிகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 50 என்ற அளவில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் வேகமாக குணமடைந்து வருகிறார்கள். நேற்று 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 482 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது 319 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று திருப்பூரை வந்த 54 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களான கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல சரிகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 50 என்ற அளவில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் வேகமாக குணமடைந்து வருகிறார்கள். நேற்று 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 482 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது 319 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று திருப்பூரை வந்த 54 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.