search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona virus"

    • ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    • போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓட்டல்களில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு வழிவகை செய்து உள்ளது.

    இரவு நேரங்களில் முழுமையாக ஓட்டல்கள் செயல்பட அனுமதி இருந்தும் கூட ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையான உரிமம் பெற்ற உணவகங்கள் தடையின்றி செயல்படலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் இரவு 11 மணிக்கு மேல் மூடுமாறு போலீசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறுகையில், "சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூடச்சொல்லி போலீசார் கூறுகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் சென்னை நகருக்குள் வருபவர்கள் ஒரு கப் காபி அல்லது லேசான டிபன் சாப்பிட விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் ஓட்டல் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    சங்க செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் கூறியதாவது:-

    ஐ.டி. நிறுவனங்கள், விமான நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு அதிகாலை வரை மக்கள் பயணமாகி கொண்டே இருக்கின்றனர்.

    இதுதவிர பெரிய மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள். பஸ், ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி மற்ற முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்து இருந்தால்தான் அரசுக்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த முடியும். தொழில் செய்யவிடாமல் தடுத்தால் எப்படி வரி கட்டுவது.

    எனவே போலீஸ் இடையூறு இருக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஓட்டல்களை மூடச் சொல்வது இத்தொழிலை நசுக்குவதற்கு சமமாகும். டீக்கடைகள், ஓட்டல்கள் அதிகாலையில் திறந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும் என்றார்.

    இதற்கிடையே இரவு 11 மணிக்கு மேல் அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஓட்டல்கள் செயல்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலவசமாக மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியால் நிலைமை கட்டுக்குள் வர தொடங்கியது
    • பலருக்கு நுரையீரல் திறன் பாதிப்பு நிரந்தரமானதாக இருக்கும் என ஆய்வில் தெரிகிறது

    கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல் 2020 மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பரவியது.

    கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க அரசு கொண்டு வந்த நாடு தழுவிய பொது முடக்கத்தினால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். ஆனாலும், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியாவில் வெகுவேகமாக லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.

    2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அனைவருக்கும் வழங்க தொடங்கியது.

    மக்கள் முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டதால் சிறிது சிறிதாக நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில், வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவ கல்லூரி (Christian Medical College) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் திறன் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.


    அந்த ஆய்வு, "ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்கள் ஆகியோருடன் ஒப்பிட்டால், கொரோனா தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சிலருக்கு காலப்போக்கில் இந்த பாதிப்பு சரியாகலாம்; ஆனால், பலருக்கு அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் தொடரும் ஒரு நிரந்தர பாதிப்பாகத்தான் இது இருக்கும்" என தெரிவிக்கிறது.

    "பப்ளிக் லைப்ரரி ஆஃப் சைன்ஸ்" (PLOS) எனும் லாப நோக்கற்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு கட்டுரைக்காக பங்கேற்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

    "அனைத்து விதமான பரிசோதனைகளிலும், அயல்நாட்டினருடன் ஒப்பிட்டால் இந்தியர்களின் நுரையீரல் திறன் மிக குறைவாக இருந்தது" என கிறித்துவ மருத்துவ கல்லூரியின் நுரையீரல் மருத்துவ துறையின் பேராசிரியர் டி. ஜே. கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

    • கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    • அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில ஆளுநராக பதவி வகித்து வருபவர் தாவர்சந்த் கெலாட்.

    இந்நிலையில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார் என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அவரது உடல்நிலை சீராக உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள், சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    • கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பதற்றம்.

    சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    சம்பந்தப்பட்ட நபர் கடந்த 31ம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இந்நிலையில், அந்த நபருக்கு தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    இந்த சூழலில், சென்னையில் ஒருவர் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
    • நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தகவல்.

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    இதற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 9க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில், புதுக்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

    • டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.
    • டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது.

    சென்னை:

    சீனாவில் உருவாகி உலகையே தடம்புரள செய்து விட்டது கொரோனா வைரஸ்.

    கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. 'சார்ஸ் கொரோனா வைரஸ்' எனப்படும் கொரோனா தொற்று பல உருமாற்றங்களை அடையக் கூடியது. 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகம் எடுத்து பரவியது.

    கொரோனா வைரஸ் சில வார இடைவெளிகளில் புதிய புதிய வடிவங்கள் எடுத்தது. காமா, பீட்டா, ஆல்பா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்று வகை வகையாக கொரோனா உருமாறியது. இதில் டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.

    ஆல்பா வகை கொரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் ஓமைக்கரானாக மாறியது. இந்த ஓமைக்கரான் நூற்றுக்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

    அந்த வரிசையில் ஓமைக்ரானின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரசில் இருந்து புதிய வகை கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. அந்த புதிய வகை கொரோனா ஜே.என்.1 என்று அழைக்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து உலகம் முழுக்க நிலைத்திருக்கும் என்பதை மீண்டும் காட்டும் வகையில் தற்போது புதிதாக உருவெடுத்திருக்கிறது ஜே.என்.1 வகை பாதிப்பு.

    இந்த புதிய கொரோனா முதலில் அமெரிக்காவில் கடந்த அக்டோபர் இறுதியில் கண்டறியப்பட்டது. இது தற்போது உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.


    ஜே.என்.1 புதிய வவகை கொரோனா இந்தியாவிலும் பரவி இருக்கிறது. கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    சிலரின் சளி மாதிரிகளை மரபணு பகுப் பாய்வுக்கு உட்படுத்தியதில் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கோவாவில் 34 பேருக்கும், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு அத்தொற்று இருப்பதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய வகை கொரோனா பாதிப்பு இருந்தால் சில அறிகுறிகள் மூலம் கண்டு பிடித்துக் கொள்ளலாம். ஒருவருக்கு தொடர்ந்து சில தினங்கள் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, சோர்வு, உடல்வலி, சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுப் போக்கு ஆகியவை இருந்தால் அது ஜே.என்.1 கொரோனா பாதிப்புக்கு அறிகுறிகளாக கருதப்படுகிறது.

    புதிய வகை கொரோனா தாக்கத்தில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை எளிதாக தற்காத்துக் கொள்ள முடியும். பொது இடங்களில் மற்றும் அதிக பேர் கூடும் பகுதிகளில் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளி, கைகளை சோப்பு மூலம் கழுவுதல், இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக்கொள்ளுதல் அவசியமாகும்.

    இவை தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்துமிக்க உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. மது, புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், உடற்பயிற்சி ஆகியவைகளை கடைபிடித்தால் ஜே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நூற்றுக்கணக்கான உருமாற்றங்களை பெற்று விட்டதால் ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் ஜே.என்.1 வகைக்கு பலன் அளிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதே வேளையில் ஏற்கனவே தடுப்பூசி இரு தவணையும், பூஸ்டர் தவணையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஜே.என்.1 வகை தொற்று பாதித்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதிய வகை கொரோனாவான ஜே.என்.1 பற்றி சர்வதேச அளவில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. உலக சுகாதார அமைப்பும் அதை பற்றி ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்த புதிய வைரஸ் வீரியமே இல்லாத ஒன்று என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சளி தொல்லை காய்ச்சலுடன் இந்த வைரஸ் விலகி சென்று விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை பற்றி மக்கள் எந்த வகையிலும் குழப்பமோ, பீதியோ அடைய தேவை இல்லை என்று மருத்துவர்கள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர்.

    புதிய வகை கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள கவனமாக இருந்தால் போதும். ஜே.என்.1 ரக கொரோனா பாதித்தாலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    இணை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமே புதிய வகை கொரோனா வைரஸ் சற்று கூடுதல் உடல் வலியை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருந்தால் போதுமானது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சளி, இருமல், ஜலதோஷம் ஏற்பட்டால் உடனடியாக அதை கவனித்து கொள்வது நல்லது.

    • பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்.
    • பெங்களூரு நகரில் மட்டும் 20 பேர் ஜே.என்-1 வகை கொரோனாவால் பாதிப்பு.

    இந்தியாவில் புதிதாக பரவும் ஜேஎன்1 வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கோவாவில் 34 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும், கர்நாடகாவில் 8 பேரும், கேரளாவில் 6 பேரும், தெலங்கானாவில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை நிலவரப்படி தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் மட்டும் ஜே.என்-1 வகை கொரோனாவால் புதிதாக 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் வீட்டில் தனிமைப்படுத்தலிலும், 9 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும் உள்ளனர்.

    பெங்களூரு நகரில் மட்டும் 20 பேர் ஜே.என்-1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.
    • நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த சூழலில் புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கொரோனா மரபியல் கூட்ட மைப்பின் (இன்சா காக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-

    இந்தியாவில் சுமார் 88 சதவீத மக்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கொரோனா வைரசால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.


    அதேநேரம், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம் குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவைசேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் வெளியிட்ட அறிக்கையில், 'குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எக்ஸ் பி.பி.1 வகை வைரசுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஜே.என்.1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்' என்று தெரிவித்து உள்ளது.

    • கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணம்.
    • கடந்த ஒரு மாதத்தில் உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது.

    ஜெனீவா:

    உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் ஆகியுள்ளது.

    இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.

    இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 28 நாட்கள் கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளது.

    • கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கேரளாவில் 266 பேரும், கர்நாடகாவில் 70 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

    கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,420 ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே, பாட்னா, கயா மற்றும் தர்பங்கா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு பீகார் அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் அதிகபட்சமாக 265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், பொது இடங்களில் இனி அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    • புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன்.
    • 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும்.

    பெங்களூரு:

    இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் உருமாறிய ஜே.என்-1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநில அரசு புதிய வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதால் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்னும் 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும். தற்போதைக்கு கர்நாடகம் சகஜ நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரித்தால் மட்டும் பல்வேறு தடைகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது அத்தகைய சூழ்நிலை எழவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×