செய்திகள்
தி.மு.க.வினர் சாலை மறியல்- 200 பேர் கைது
முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய எம்.பி.யுமான ஆ.ராசா மீது வழக்கு தொடரப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
இடிகரை:
முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய எம்.பி.யுமான ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கோவை வீரபாண்டிபிரிவு பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அறிவரசு தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள், திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்தும், ஆ.ராசா மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், பிளிச்சி கிரி, பேரூர் தி.மு.க. செயலாளர்கள் கனகராஜ், சுரேஷ்குமார், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், கோவனூர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு தடையை மீறி சாலைமறியலில் ஈடுபட்டதாக 80 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய எம்.பி.யுமான ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கோவை வீரபாண்டிபிரிவு பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அறிவரசு தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள், திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்தும், ஆ.ராசா மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், பிளிச்சி கிரி, பேரூர் தி.மு.க. செயலாளர்கள் கனகராஜ், சுரேஷ்குமார், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், கோவனூர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு தடையை மீறி சாலைமறியலில் ஈடுபட்டதாக 80 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.