செய்திகள்
தற்கொலை

கோவை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-05 08:12 GMT   |   Update On 2020-12-05 08:12 GMT
கோவை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கருமலைசெட்டிபாளையம் அஜய் முகர்ஜி வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு அம்பிகா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த ஆனந்தன், பல முறை அம்பிகாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று சமாதானம் பேசி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அம்பிகா வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தன் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News