செய்திகள்
மரணம்

திண்டுக்கல் அருகே சாலையோரத்தில் முதியவர் பிணம்

Published On 2020-11-27 06:59 GMT   |   Update On 2020-11-27 06:59 GMT
திண்டுக்கல் அருகே ஓம்சக்தி நகரில் சாலையோரத்தில் உள்ள ஒரு கடை முன்பு நேற்று முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே ஓம்சக்தி நகரில் சாலையோரத்தில் உள்ள ஒரு கடை முன்பு நேற்று முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் கர்நாடக மாநிலம் மாத்தூரை சேர்ந்த வர்மா (வயது 61) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News