செய்திகள்
திருமங்கலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது
திருமங்கலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கடந்த 14-ந்தேதி தீபாவளியையொட்டி பட்டாசு வாங்குவதற்காக வடக்கம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜய், மாதேஷ், அழகர், தினேஷ்குமார் உள்பட 5 பேர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ஓரமாக நின்று பேசுமாறு முத்துப்பாண்டி கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் முத்துப்பாண்டி தாக்கப்பட்டார். அப்போது முத்துப்பாண்டியின் பெரியப்பா தொழிலாளி விஜயநாதன்(வயது 52) தகராறை விலக்க சென்றபோது அவரையும் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவர் இறந்தார்.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அஜய்(20), மாதேஷ்(19), அருண்குமார்(19), தினேஷ்(19), அழகர்(45) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று 5 பேரையும் திருமங்கலம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கடந்த 14-ந்தேதி தீபாவளியையொட்டி பட்டாசு வாங்குவதற்காக வடக்கம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜய், மாதேஷ், அழகர், தினேஷ்குமார் உள்பட 5 பேர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ஓரமாக நின்று பேசுமாறு முத்துப்பாண்டி கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் முத்துப்பாண்டி தாக்கப்பட்டார். அப்போது முத்துப்பாண்டியின் பெரியப்பா தொழிலாளி விஜயநாதன்(வயது 52) தகராறை விலக்க சென்றபோது அவரையும் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவர் இறந்தார்.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அஜய்(20), மாதேஷ்(19), அருண்குமார்(19), தினேஷ்(19), அழகர்(45) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று 5 பேரையும் திருமங்கலம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.