செய்திகள்
விபத்து பலி

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2020-11-18 06:21 GMT   |   Update On 2020-11-18 06:24 GMT
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கவேலுவின் மகன் அருண்குமார் (வயது 25). இவர் பெரம்பலூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அந்த பகுதியில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் ரோந்து போலீசார் அங்கு வந்து, அருண்குமாரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News