செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்

Published On 2020-10-26 10:37 GMT   |   Update On 2020-10-26 10:37 GMT
கோவையில் இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து நாளை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது.

கோவை:

கோவையில் இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்து உள்ளார். 

மேலும் இந்த கைது சம்பவத்தை கண்டித்து நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு குனியமுத்தூர் போலீஸ் நிலையம் முற்றுகை போராட்டம் நடக்கிறது. 

இதில் தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

Tags:    

Similar News