செய்திகள்
கயத்தாறில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கயத்தாறில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
விருதுநகர் மாவட்டம் சிவந்திபுரம் காட்டு தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 23). கூலி தொழிலாளி. இவரும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன், அந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி, அவரை அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார்.
இதற்கிடையே சிறுமி மாயமானது குறித்து, கயத்தாறு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.