செய்திகள்
தற்கொலை

சமைக்காமல் டி.வி. பார்த்ததை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை

Published On 2020-10-11 14:04 GMT   |   Update On 2020-10-11 14:04 GMT
சமைக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஜீயபுரம்:

திருச்சி அல்லித்துறையை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). இவருடைய மனைவி திவ்யா(24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமைக்காமல் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த திவ்யாவை மணிகண்டன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யா எலிபசையை(விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திவ்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணா விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News