செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

ஊத்துக்குளியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

Published On 2020-10-11 11:52 GMT   |   Update On 2020-10-11 11:52 GMT
ஊத்துக்குளியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்குளி:

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகிலுள்ள கைகோலபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 28). இவர் ஊத்துகுளி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கொடியம்பாளையம் கொடியம் பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பணி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பிரகாஷ் உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு நிலைய அதிகாரி முருகதாஸ் தலைமையிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷ் உடலை மீட்டனர். பின்னர் அவரது அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார தாக்கி உயிர் இறந்த ஒப்பந்த தொழிலாளி பிரகாஷ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் இனிவரும் காலங்களில் இது போன்ற மின் விபத்துகள் நடைபெறாமல் இருக்க தொடர் பாதுகாப்பு வகுப்புகளும் பாதுகாப்பு கருவிகளும் வழங்க வழிவகை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட தொ.மு.ச. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News